ஞாயிறு, 21 மார்ச், 2021

வரலாற்றுப் புரிதலும் நானும் - நியூட்டன் மரியநாயகம்

 

ஒடுக்கியவரின் வரலாறும் – ஒடுக்கப்பட்டவரின்  வரலாறும் ………


“இன்று சமூகத்தில்  ஆளுமை /ஆதிக்கம்  செலுத்தும் கடந்த காலம் பற்றிய கதைகளையும், அது சார்ந்த,  ஆதிக்க சக்திகளின்    வரலாற்று  உருவங்களையும்/ வேடங்களையும்/ பாத்திரங்களையும், கலையின் குரூரமான பக்கங்களையும்  அம்பலப்படுத்தி – ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறை வெளிக்கொணர்வதே  உண்மையான வரலாற்றுப் பதிவாளனின் கடைமையாகும்…”  

வெள்ளி, 29 மே, 2020

பன்னிரண்டு இளநீல ரோஜாக்கள்

 -தமயந்தி-
------------------------ 
நன்றி: தாயகம் - கனடா 
E-Book வெளியீடு உயிர்மெய் 


காலை பத்து மணி.
படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லை. அடித்துப் போட்டாற்போல் அசதியாக இருந்தது.
கடந்த பல வருடங்களாக இந்த தினத்தில் காலை ஏழுமணியிலிருந்து இரவு ஏழுமணிவரை தெருத்தெருவாக அலைவேன் கமெராவோடு. முந்நூறுக்கும் குறையாத படங்களைப் பிடித்துக் கமெராக் கூட்டுக்குள் அடைத்து வைத்திருப்பேன்.
பத்துப் பதினைந்து படங்களாவது மறுநாள் தினப்பத்திரிகையிலும் வெளியாகியிருக்கும். வழமையாகப் பிரசுரிக்கப்படும் எனது படங்கள் போலல்லாது, இந்தப் படங்கள் மட்டும் ஒருகணம் கன்னங்களை வருடிக் கொடுக்கும், மறுகணமே நகங்களால் நெஞ்சைக் கிழிக்கும். ஆனாலும் சற்றுநேரமாவது படங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்பேன்.

புதன், 27 மே, 2020

ஒரு புகைப்படக்காரன் பொய் சொல்லவேண்டியதில்லை -கருணாகரன்-

நேர்காணல் - சங்கர கம்பர் கதிர்வேலு 



சந்தித்துப் பதிவு செய்தவர்: கருணாகரன் (2012) 

2015 நவம்பர் 19ஆம் திகதி தனது சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புகையில் மழை வெள்ளத்தில் நிரவியிருந்த கட்டில்லாத கிணற்றில் தவறி விழுந்து மரணித்த சிரேஷ்ட புகைப்பட ஊடகவியலாளர் சங்கர கம்பர் கதிர்வேலு அவர்களை 2012இல் கருணாகரன் அவர்கள் நேர்காணல் செய்து வெளியிட்டிருந்தார். நூலுருவிலும் "மகிழ்" பதிப்பகத்தினூடாக வெளியாகியுள்ளது. இன்றைய தேவை உணர்ந்து மீள்பதிவு செய்யப் படுகிறது. 
(நன்றி: புல்வெளி, கருணாகரன்) 

வெள்ளி, 5 ஜூலை, 2019

பொருந்தாச் சட்டமும், சீரழியும் கடற்புறமும்

கஞ்சாக் கடத்தல்காரருக்கே கடற்கரைகள்,
மீனவர்களுக்கு அல்ல.
"சட்டப்படி"


//இந்தப் படத்துக்கான சிறு குறிப்பை எழுதப்போனால் பக்கம் பக்கமாகப் போகிறது.
முகநூலில் அப்படி எழுதி நண்பர்களின் பொறுமையை அடிக்கடி சோதிப்பது நல்லாப் படேல்ல.//
என்ற குறிப்போடு முகநூலில் பதிவிட்ட படத்துக்கான சற்று விரிவான குறிப்பு.

--------------------------
முன்னைய காலங்களில் கடற்கரைகளும், கரைகளும் மிகவும் சுதந்திரமாக இருந்தன.
மாசற்ற காற்றை சோளகம், வாடை கொண்டல், கச்சான் என பருவ காலங்கள் தவறாமல் அள்ளி வீசிக் கொண்டிருந்தன. 
கடலின் பொருட்டும், கரைகளின் பொருட்டும் மீனவர்களும் கட்டற்ற சுதந்திரமுடையவர்களாகவும், கர்வம் கொண்டவர்களாகவும், கடலுக்கும், கரைகளுக்கும் பாதுகாவலர்களாகவும் இருந்தார்கள். கடலும் கரையும்தான் மீனவர்களின் வீடாகவும் இருந்தன.
குடும்பத்தோடு தாம் வாழும் குடிசையை வேறாக, கடற்கரைகளை வேறாகப் பார்த்தறியாத கூட்டம்தான் பாரம்பரிய மீனவ மக்கள்.


வியாழன், 21 பிப்ரவரி, 2019

புரிதலின்மை பெரும் பாவ காரியமல்ல....


18, 20 வருடங்களுக்குமுன் ஒரு இலக்கியக்கூட்ட மண்டபத்தில் எனது புகைப்படக் கண்காட்சியும் காட்சிப் படுத்தலாகியிருந்தது.
அன்று பேசும்போது, 
"எனது கவிதைகளைப் புரிந்துகொள்ள உங்களிற் பலருக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்தாலும் முடியாது" என்று சொன்னேன். 
கடுப்பாகி விட்டார்கள் நண்பர்கள்.
(அது, ஒரு பதிலை வந்தடைய அப்போதைக்கு நண்பர்களைக் கடுப்பேற்றச் சொன்னதுதான் என்றே வைத்துக் கொள்வோம்)

"எங்க காட்டு உன்ர கவிதைகளை"

வியாழன், 9 பிப்ரவரி, 2017

தொட்டுணர்ந்த ஏழு தேவதைகள் பற்றிய கதை -கரவைதாசன்-

தமயந்தியின் ஏழு  கடல் கன்னிகள்  வாசிப்பு மனநிலை!


அலை ஒதுங்கிய கரையில் விசாரணை செய்! எனும் அரசியல் கோரிக்கையுடன் விரிகிறது பக்கங்கள்.

ஓலசுண்டின் அலை ஒதுங்கிய கரையொன்றில் தானை வைத்து கடல் நுகப்பினை கணக்கிட்டு தூண்டில் எறிந்த களைப்பு தீர முன்னே வங்கு நிறைந்த மீன் அளைந்த கைகளை உப்புநீரிலேயே அலம்பிவிட்டு ஈரமான கைகளை தன் சாரத்திலே துடைத்து விட்டு உழைப்பேறி மரத்துப்போன விரல் நீட்டி அழைக்கின்றார் .  கதை சொல்ல...
மொழிகளில் யார் தேவதைகளை பிரசவித்தவர்களோ அவர்களே அறிவர், தேவதைகளை காண முடியாது, பேசமுடியாது, நுகர முடியாது,  சுவைக்க முடியாது, தொட்டுணரவும் முடியாது. 

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடனான காற்றில் உப்புக் கரிக்கவில்லை

தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள்
தர்சன் அருளானந்தன்-

டினமான கணக்குகளை அறிந்து கொண்டும் அந்தக் கணக்குகளிற்குள் ஊடுருவி, கடந்து சென்ற படைப்பின் உயர்வான கவர்ச்சியாக "அதற்குள் அவராகவே வாழ்வதால்" சாத்தியம் ஆக்கப்பட்டுள்ளது.

தமயந்தியின் கதைகள் இயல்பான நேரடித் தன்மை கொண்டவை. இக் கதைகளின் பின்னணியில் இயல்பான கடல்சார் வாழ்க்கை கண்ணோட்டமும், ஈழப்போராட்ட மனிதம் சார் ஏக்கங்களும் அக்கம்பக்கமாக நிறுத்தப்படுகின்றது. கதைகள் அனுபவத்தையும், உணர்வுநிலைகளையும் மட்டுமே நம்பியிருக்கின்றன. உண்மையின் யதார்தங்கள் ஆங்காங்கே எமது நனவிலி மனங்களை கட்டுடைத்து வெள்ளம்போல் நுரைதிரள உப்பு கலந்த வாசனையோடு எம் நாசிகளை தழுவிச் சொல்கின்றன.