வியாழன், 19 பிப்ரவரி, 2015
நெடும்பயணம் -தமயந்தி-
82, 83 காலப் பகுதிகளில் மிகுந்த உணர்வுகளோடும், அர்ப்பணிப்பு மனநிலைகளுடனும் விடுதலை இயக்கங்களுக்கெனப் புறப்பட்டுவந்த இளம் பெண்களை எங்களது யாழ்ச்சமூகம் எப்படியெல்லாம் வசவு சொல்லி நோகடித்தது.
"எடுபட்டுப் போனவள், கிணாய்ச்சுக்கொண்டு ஓடினவள், வேசையாடப் போனவள், தோறை, அடங்காப்பிடாரி, அள்ளுப்பட்ட வேசை, அரிப்பெடுத்த குமரி, தறுதலைத் தேவடியாள், ஆட்டக்காறி, டம்பாசாரி...." இப்படிப் பல பட்டப் பெயர்களையும் வாங்கிக்கொண்டு, நாட்டு விடுதலைக்காகப் பணி செய்த பெண்கள் ஆயிரமாயிரம். ஆயினும் அவர்கள் இதனையெல்லாம் கொஞ்சம்கூடக் கரிசனைக்கெடுத்துக் கொள்ளவில்லை. தாம் ஏற்றுக்கொண்ட தேச விடுதலைப் பணியைத் தலையால் சுமந்தார்கள். சொல்லொணா இடர்பாடுகளைத் துச்சமென ஊதித் தள்ளினார்கள். அந்தந்த அமைப்புக்கள் தத்தம்மளவில் கொண்ட விடுதலைக் கொள்கைகளை, அரசியற் கருத்தியலை உள்வாங்கி, தெளிவுள்ளவர்களாகவே மக்களுக்குள் போர்ப்பணி செய்தார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)