வியாழன், 9 பிப்ரவரி, 2017

தொட்டுணர்ந்த ஏழு தேவதைகள் பற்றிய கதை -கரவைதாசன்-

தமயந்தியின் ஏழு  கடல் கன்னிகள்  வாசிப்பு மனநிலை!


அலை ஒதுங்கிய கரையில் விசாரணை செய்! எனும் அரசியல் கோரிக்கையுடன் விரிகிறது பக்கங்கள்.

ஓலசுண்டின் அலை ஒதுங்கிய கரையொன்றில் தானை வைத்து கடல் நுகப்பினை கணக்கிட்டு தூண்டில் எறிந்த களைப்பு தீர முன்னே வங்கு நிறைந்த மீன் அளைந்த கைகளை உப்புநீரிலேயே அலம்பிவிட்டு ஈரமான கைகளை தன் சாரத்திலே துடைத்து விட்டு உழைப்பேறி மரத்துப்போன விரல் நீட்டி அழைக்கின்றார் .  கதை சொல்ல...
மொழிகளில் யார் தேவதைகளை பிரசவித்தவர்களோ அவர்களே அறிவர், தேவதைகளை காண முடியாது, பேசமுடியாது, நுகர முடியாது,  சுவைக்க முடியாது, தொட்டுணரவும் முடியாது. 

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடனான காற்றில் உப்புக் கரிக்கவில்லை

தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள்
தர்சன் அருளானந்தன்-

டினமான கணக்குகளை அறிந்து கொண்டும் அந்தக் கணக்குகளிற்குள் ஊடுருவி, கடந்து சென்ற படைப்பின் உயர்வான கவர்ச்சியாக "அதற்குள் அவராகவே வாழ்வதால்" சாத்தியம் ஆக்கப்பட்டுள்ளது.

தமயந்தியின் கதைகள் இயல்பான நேரடித் தன்மை கொண்டவை. இக் கதைகளின் பின்னணியில் இயல்பான கடல்சார் வாழ்க்கை கண்ணோட்டமும், ஈழப்போராட்ட மனிதம் சார் ஏக்கங்களும் அக்கம்பக்கமாக நிறுத்தப்படுகின்றது. கதைகள் அனுபவத்தையும், உணர்வுநிலைகளையும் மட்டுமே நம்பியிருக்கின்றன. உண்மையின் யதார்தங்கள் ஆங்காங்கே எமது நனவிலி மனங்களை கட்டுடைத்து வெள்ளம்போல் நுரைதிரள உப்பு கலந்த வாசனையோடு எம் நாசிகளை தழுவிச் சொல்கின்றன.