தமயந்தியின் ஏழு கடல் கன்னிகள் வாசிப்பு மனநிலை!
ஓலசுண்டின் அலை ஒதுங்கிய கரையொன்றில் தானை வைத்து கடல் நுகப்பினை
கணக்கிட்டு தூண்டில் எறிந்த களைப்பு தீர முன்னே வங்கு நிறைந்த மீன் அளைந்த
கைகளை உப்புநீரிலேயே அலம்பிவிட்டு ஈரமான கைகளை தன் சாரத்திலே துடைத்து
விட்டு உழைப்பேறி மரத்துப்போன விரல் நீட்டி அழைக்கின்றார் . கதை சொல்ல...
மொழிகளில் யார் தேவதைகளை பிரசவித்தவர்களோ அவர்களே அறிவர், தேவதைகளை காண
முடியாது, பேசமுடியாது, நுகர முடியாது, சுவைக்க முடியாது, தொட்டுணரவும்
முடியாது.